சமூகக் கட்டமைப்புகளால் நிராகரிக்கப்பட்டவர்கள் அச்சமூக சமய நம்பிக்கைகளில் முக்கிய பங்காற்றிடுவர். தீங்கிழைக்கப்பட்டவர்களையே தீங்கானவர்களாய் காட்டிடும் ஒரு வித கூட்டு மனப்போக்கிற்கான அடித்தளம் பல நூறு ஆண்டுகளாய் பல வடிவங்களில் சமூகத்திற்குள் ஊட்டப்பட்டுக் கொண்டிருந்தாலும் 'கதை சொல்லல்' எனும் செவிவழி செய்திகளாய் பரப்பப்பட்ட கதைகளின் மூலமாக நிறுவப்பட்ட சமூக ஒழுக்க நெறிகளில் பாதிக்கப்பட்டவர்களின் தடங்கள் அப்பட்டமாய் வெளிப்பட்டிருக்கும். அப்படியாக அடையாளங்கள் அழிக்கப்பட்டு முற்றிலும் தடம் மாற்றப்பட்ட செவ்விலக்கிய மகளிர் சிலருள் ஒருவரான ஒரு தொன்ம நாயகியின் உரையாடல் தென்றிசை மாதெய்வங்கள்.